புதன், 10 பிப்ரவரி, 2010

பாராளுமன்றம் சற்று முன்னர் கலைக்கப்பட்டுள்ளது..!

பாராளுமன்றம் சற்று முன்னர் கலைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாகத் கூறப்படுகிறது. பாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அச்சிடும் நோக்கில், குறித்த அறிப்பு அரசாங்க அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் 8ம்திகதி அளவில் தேர்தல்கள் நடத்தப்படலாம் என ஜனாதிபதி செயலகத்தின் ஊடகப்பணிப்பாளர் லூசியான் ராஜகருணாநாயக்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத் தேர்தல்களுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் 19ம் திகதிமுதல் 26ம் திகதிவரையில் கோரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலில் போட்டியிடும் முக்கிய கட்சிகளான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன வேட்பாளர்களை தெரிவதில் கூடுதல் முனைப்புக்காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக