திங்கள், 1 பிப்ரவரி, 2010

ஜனாதிபதி ரஷ்யாவிற்கு விஜயம் செய்யவுள்ளார்..!!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ரஷ்யாவிற்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது. ஜனாதிபதியாக மீண்டும் தெரிவுசெய்யப்பட்டதன் பின்னர் அவர் மேற்கொள்ளும் முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் என தெரிவித்துள்ள ஊடகப்பிரிவு இந்த விஜயம் இம்மாதம் 5ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஜயத்தின் முக்கிய நோக்கம் 30 கோடி அமெரிக்க டொலர் கடன் உதவி தொடர்பான பேச்சு வார்த்தைகளை மேற்கொள்வதற்கு எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி கடன் திட்டத்தின் கீழ் யுத்த உபகரணங்கள் தரைக் கண்ணி வெடி அகற்றும் இயந்திரங்கள் மற்றும் ஹெலிகொப்படர்கள் என்பனவற்றை பெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விஜயத்தின் போது இது தொடர்பான ஒப்பந்தம் ஒன்றும் இரு நாடுகளுக்கும் இடையே கைச்சாத்திடப்படும் எனவும் ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக