வியாழன், 4 பிப்ரவரி, 2010
மன்னார் கோட்டை சோதனைச் சாவடியில் சோதனை நடவடிக்கைகள் நீக்கம்..!
மன்னார் கோட்டைப் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் இராணுவ சோதனைச் சாவடியில் சோதனை நடவடிக்கைகள் அகற்றப்பட்ட நிலையில் சிரமமின்றி போக்குவரத்துகளை மேற்கொள்ளக்கூடியதாக இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். மன்னார் நுழைவாயிலுக்கு அருகாமையிலேயே கோட்டை சோதனைச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. இங்கு கடற்படையினரதும், பொலீசாரினதும் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதன்போது, கடற்படையினரின் சோதனைச்சாவடி முதலாவதாக அகற்றப்பட்டது. அந்த வகையில் தற்போது பொலீசாரினது சோதனைச் சாவடிகளும் அகற்றப்பட்ட நிலையில் போக்குவரத்துகள் இயல்பாக இடம்பெற்று வருகிறது. அதேவேளை, மக்கள் மயப்படுத்தப்பட்ட மன்னார் டிப்போவிலிருந்து யாழ்பாணத்திற்கான சேவைக்கட்டணம் நேற்றுமுதல் குறைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதற்கு முன்னர், மன்னாரிலிருந்து யாழப்பாணத்திற்கான சேவைக்கட்டணம் 300ரூபாவாக அறவிடப்பட்டு வந்தநிலையில், நேற்றுமுதல் 221ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக