செவ்வாய், 26 ஜனவரி, 2010

தனிநபரோ குழுக்களோ வன்முறைகளைத் தூண்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் துப்பாக்கிப் பிரயோகம் -பொலீசார்..!

இன்றைய தேர்தலின்போது எந்தவொரு தனிநபரோ குழுக்களோ சட்டத்தைப் புறக்கணித்து வன்முறைகளைத் தூண்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளும்நிலை ஏற்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். வன்முறைகளைத் தூண்டும் நடவடிக்கைகளில் எவராவது ஈடுபட்டால் முதலில் பொலிஸார் எச்சரிக்கை அறிவுறுத்தல்களை விடுப்பார்கள். வாக்களிப்பு நிலையத்தில் சொத்துக்களுக்குச் சேதம்விளைவித்தல் மற்றும் வன்முறைகளைத் தூண்ட எவராவது முயற்சித்தால் பொலிஸார் முதலில் எச்சரிக்கை விடுப்பார்கள். எச்சரிக்கைக்கு மதிப்பளிக்காவிடின் சுடுமாறு பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று தேர்தல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் காமினி நவரட்ன தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக