செவ்வாய், 26 ஜனவரி, 2010

நேரகாலத்துடன் சென்று வாக்களிக்கவும் -ஜனாதிபதி கோரிக்கை..!

சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாப்பதற்கு தேவையான ஆலோசனைகளை பாதுகாப்பு பிரிவினருக்கு வழங்கியிருப்பதாகவும் இன்று காலையிலேயே வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்குகளை அளிக்குமாறும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டுமக்களை கேட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, 2005ம் ஆண்டு மக்களின் ஆணையை பெற்றுக் கொண்டதையடுத்து இரண்டு வருட பதவிக்காலம் மீதமாகவுள்ள நிலையில் ஜனாதிபதித் தேர்தலை நடத்த முன்வந்தமை ஜனநாயகத்தின்மீது எனக்கு உள்ள நம்பிக்கையை மற்றும் கௌரவத்தின் காரணமாகவேயாகும். ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்கள் அனைத்தும் தற்போது பூர்த்தியடைந்துள்ளன. முறையான தேர்தல் நடைபெறுவதற்கு தேர்தல் ஆணையாளருக்கு உதவுவது ஜனநாயகத்தை மதிக்கும் அனைத்து பிரஜைகளினதும் கடமையாகும். ஜனநாயகத்தை மதிக்கும் மனிதஉரிமைகளை பாதுகாக்கும் கீர்த்திமிக்க நாடு என இலங்கை வென்றுள்ள கௌரவத்தை மேலும் பாதுகாப்பதுடன் ஜனநாயகத்தையும் தாய்நாட்டின் கீர்த்தியையும் பாதுகாப்பதற்கு ஐக்கியமாகவும் ஒரு மனதுடனும் ஆர்ப்பாட்டமின்றி நிதானமாக செயற்படுமாறு நான் அனைத்து மக்களிடமும் மிகுந்த வினயத்துடன் கேட்டுக்கொள்கின்றேன் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக