வெள்ளி, 8 ஜனவரி, 2010

இடம்பெயர்ந்தவர்களை மீளக்குடியமர்த்த உலக வங்கி அவசர கடனுதவி..!!

இடம்பெயர்ந்தவர்கள் மீளக் குடியமர்த்தப்படுவதற்கான உலக வங்கியின் அவசரகடன் இந்தமாதம் இலங்கைக்கு வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த மாதம் இலங்கைக்கு 65மில்லியன் அமெரிக்க டொலர்கள் அவசரக் கடனானக் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கடன்தொகை இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கான வேலைத்திட்டத்திற்காக பயன்படுத்தப்படுமென அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமையவே இந்தக் கடன்தொகை வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக