சனி, 9 ஜனவரி, 2010

வாக்காளர் அட்டைகள் அனுப்பப்படுகின்றன, வத்திக்கான பிரதிநிதி வவுனியா விஜயம்..!!

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் அனுப்பப்பட்டு வருகின்றன. வடமாகாணத்திற்கான வாக்காளர் அட்டைகளை விநியோகிப்பதற்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பிரதி தபால் மாஅதிபர் காமினி தெரிவித்துள்ளார். கிளிநோச்சி உட்பட மீள்குடியேற்றப்பட்ட இடங்களுக்ககான (வடக்கில்) வாக்களாளர் அட்டைகளை அனுப்புவதற்கு தற்காலிகமான விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை கொழும்பிலுள்ள பாப்பரசரின் வத்திக்கான் பிரதிநிதி அதிவணக்கத்திற்குரிய ஆயர் யோசப் ஸ்பிரெறி ஆண்டகை நாளை வவுனியா வருகின்றார். முதல்தடவையாக வவுனியாவரும் இவருக்கு இறம்பைக்குளம் அந்தோனியார் தேவாலயத்தில் அன்று மாலை 4 மணிக்கு பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. சிறப்பு ஆராதனை கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக