வியாழன், 28 ஜனவரி, 2010

பாராளுமன்றம் கலைக்கப்படலாம்

தற்போதுள்ள இலங்கை பாராளுமன்றம் தனது ஆறு வருட ஆயுள்காலத்தை வரும் ஏப்பிரல் மாதம் 2ம் திகதியுடன் நிறைவு செய்வதால் புதிய பாராளுமன்றத்துக்கான தேர்தல் ஒன்று விரைவில் வரவுள்ளது.
வரும் மார்ச் மாதம் மூன்றாம் அல்லது நான்காம் வாரங்களில் புதிய பராளுமன்ற தேர்தல் வரலாமென கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன.
தற்போதுள்ள பாராளுமன்றத்தை கலைத்து புதிய பாராளுமன்றத்துக்கான மக்கள் ஆணையை கோருமாறு ஜனாதிபதி வர்த்தமானி அறிவித்தலை இன்னும் இரண்டு அல்லது மூன்று தினங்களுக்குள் வெளியிடலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக