வியாழன், 28 ஜனவரி, 2010

ஜனாதிபதியின் வெற்றியையடுத்து நாடளாவிய ரீதியில் மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம்..!!

இலங்கையின் 06வது ஜனாதிபதியாக ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ அதிகப்படியான வாக்குகளால் அமோக வெற்றிபெற்றதையடுத்து நாடெங்கிலும் மக்கள் பட்டாசுகொளுத்தி, தேசியக் கொடிகளை ஏந்தியவண்ணம் மகிழ்ச்சி ஆரவாரங்களில் நேற்று ஈடுபட்டுள்ளனர். இலங்கையின் ஆறாவது ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான ஜனாதிபதித் தேர்தல் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இத்தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிகப்படியான விருப்புவாக்குகளைப் பெற்று அமோக வெற்றிபெற்றுள்ளார். இதனையிட்டு நாடெங்கிலும் மக்கள் பட்டாசுகொளுத்தி, இனிப்புக்கள் வழங்கி தேசிய கொடிகளை ஏந்தி அசைத்தவண்ணம் மகிழ்ச்சி ஆரவாரங்களில் ஈடுபட்டனர். மக்கள் சந்திக்கு சந்தி கூடியிருந்து றபான் அடித்து பாற்சோறு பரிமாறி மகிழ்ந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக