வெள்ளி, 22 ஜனவரி, 2010

அக்கரைப்பற்று கொலைக் குற்றவாளிக்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பளிப்பு..!!

அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை கொலை செய்த குற்றத்திற்காக கைதுசெய்யப்பட்டிருந்த ஒருவருக்கு மரணதண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்குமீதான விசாரணை நேற்று கல்முனை மேல்நீதிமன்ற நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கத்தின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளையிலேயே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த பொன்னையா நவரத்னம் என்பவரைக் கொலைசெய்த குற்றத்திற்காக தங்கையா சத்தியசீலன் என்பவருக்கே மரணதண்டனை வழங்கப்பட்டுள்ளது. குறித்த கொலையாளிக்கு எதிராக அக்கரைப்பற்று பொலீசார் வழக்குத்தாக்கல் செய்திருந்தனர். கல்முனை மேல்நீதிமன்றம் ஸ்தாபிக்கப்பட்டு ஒன்றரை வருடத்திற்குள் அங்கு வழங்கப்பட்ட நான்காவது மரணதண்டனை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக