செவ்வாய், 26 ஜனவரி, 2010

வவுனியா நலன்புரி கிராமங்களில் 50வீதமான வாக்குப் பதிவுகள்..!!

வவுனியா நலன்புரி கிராமங்களில் 50வீதமான வாக்குப் பதிவுகள் இடம்பெற்றுள்ளதாக தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் நிலையத்தில் வடக்கு கிழக்குக்கான இணைப்பாளர் எம்.எச்.எம். ஹஜ்மிர் தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்டத்தில் 43வீதமானோர் வாக்களித்துள்ளதாகவும் கிளிநொச்சி மாவட்டத்தில் 3.5வீதமானோர் வாக்களித்துள்ளதாகவும் தெரிவித்த அவர், சிற்சில காரணங்களுக்காக வாக்களிப்பு வீதம் குறைவடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். வடக்குக் கிழக்குப் பகுதிகளில் தேர்தல் வன்முறைகள் தொடர்பில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் அதனை உடனடியாக வெளியிடுவதற்கு தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் நிலையம் தெரிவித்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக