செவ்வாய், 26 ஜனவரி, 2010

வாக்களிப்பு நிலையங்களில் தேர்;தல் சட்டங்களை மீறிய 114முறைப்பாடுகள் பதிவு..!

ஜனாதிபதித் தேர்தல் இடம்பெற்ற வாக்களிப்பு நிலையங்களில் தேர்;தல் சட்டங்களை மீறிய 114முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. கண்டி மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையிலான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் தொடர்பிலான முறைப்பாடுகளைப் பதிவுசெய்யும் தேர்தல் செயலகத்தின் விசேட பிரிவு தெரிவித்துள்ளார். அந்த மாவட்டத்திலிருந்து பதிவான மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 19ஆகும், கம்பஹா மாவட்டத்தில் 16முறைப்பாடுகளும், கொழும்பு மாவட்டத்தில் 12முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதாக அப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. ஒவ்வொரு முறைப்பாடுகள் பற்றியும் உயர்பொலீஸ் அதிகாரிகளும், மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளும் ஆராய்ந்துள்ளதாக செயலகம் குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய தேர்தல் சட்டம் மீறப்பட்டதால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நியாயம் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக