திங்கள், 21 டிசம்பர், 2009

அம்பாந்தோட்டை துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு !

அம்பாந்தோட்டை பெலியத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் நேற்றுப் பிற்பகலில் இடம்பெற்றதாக பெலியத்தைப் பொலீசார் தெரிவித்துள்ளனர். தெகிசல்ல கிராமிய வங்கிக்கு முன்பாக நின்று கொண்டிருந்த நபரொருவர்மீது உந்துருளியில் வந்தவர் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர் கப்போதிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலீசார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டவரை தேடும் பணியில் பெலியத்தைப் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக