புலிகள் இயக்கத்தின் கிழக்கு மாகாண சிரேஸ்ட தலைவர்களுள் ஒருவரான தயாமோகன் என்பவர் தற்போது சுவிஸ்லாந்தின் சுவைஸ் மாநிலத்தில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளதாக நம்பகரமாக தெரிய வந்துள்ளது. இவர் குறித்து ஏற்கனவே புலிகளின் இணையங்கள் செய்தி வெளியிடும் போது அவர் கிழக்கு மாகாணத்தில் நடமாடுவதாக ஒரு செய்தியையும், இலங்கை இராணுவத்தினரிடம் அவர் பிடிபட்டு விட்டதாக ஒரு செய்தியையும், அவர் மலேசியாவுக்கு தப்பியோடி விட்டதாக மற்றொரு செய்தியையும் மாறிமாறி வெளியிட்டதன் ஊடாக குழப்பும் விதத்தில் பலவித செய்திகளை பிரசுரித்து வந்த நிலையில் இன்றையதினம் “அதிரடி”யின் சுவிஸ்லாந்துக்கான நிருபர் இவர் சுவிஸ்லாந்தின் சுவைஸ் மாநிலத்தில் அரசியல் தஞ்சம் கோரியிருப்பதை உறுதிபட ஆதாரங்களுடன் அறியத் தந்துள்ளார். இவர் குறித்த தகவல்கள் மற்றும் புகைப்படங்களை தற்போது சுவிஸ் பொலீசார் ஆராய்ந்து வரும் நிலையில் அவருடன் தொடர்பு கொண்டுள்ளவர்கள் மற்றும் அவரது நடமாட்டங்கள் பற்றிய மேலதிக தகவல்களை பற்றியும் சுவிஸ் பொலீசார் கோரி வருகின்றனர். இந்நிலையில் அவர் பற்றிய மேலதிக தகவல்களை பொதுமக்கள் அதிரடி இணையத்தின் மின்னஞ்சல் முகவரியூடாகவும் தெரிவிக்க முடியும்.
Thanks… ATHIRADY
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக