புதன், 23 டிசம்பர், 2009

கொக்கட்டிச்சோலையில் கர்ப்பிணிப்பெண் படுகொலை !!

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 33வயதான முருகமூர்த்தி மிகுந்தி எனும் கர்ப்பிணிப்பெண்; கொலை செய்யப்பட்டுள்ளதாக பட்டிப்பளை பொலீசார் தெரிவித்துள்ளனர். 05மாதக் கர்ப்பிணித் தாயான இப்பெண் கழுத்துவெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், இப்பெண்ணின் கொலை தொடர்பாக அவரது கணவரான கிருஷ்ணபிள்ளை மணியன் மற்றும் அவரது நண்பர் ஒருவரும் சந்தேகத்தின்பேரில் பொலீசாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்பெண்ணின் கணவன் வேறொரு பெண்ணுடன் கள்ளக்காதல் தொடர்பு வைத்திருந்ததாகவும் அதில் ஏற்பட்ட தகராறு காரணமாகவே இக்கொலை இடம்பெற்றிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக