புதன், 23 டிசம்பர், 2009
வடமராட்சியில் தொடரும் மழையால் மக்கள் பாடசாலையில் தஞ்சம்..!
குடாநாட்டில் தொடரும் மழையால் மக்கள் பாடசாலையில் தொடர்ந்து தங்கியுள்ளனர். கடந்த சில நாட்களாக வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக குடாநாட்டில் பரவலாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது. நேற்று பெய்த கடும் மழை காரணமாக வடமராட்சி கிழக்கு மருதங்கேணி உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்கு உட்பட்ட மணற்காடு பகுதி வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ளது. அப்பகுதியில் உள்ள பல வீடுகள் வெள்ளத்தால் சூழ்ந்துள்ள நிலையில் வீடுகளில் இருந்த மக்கள் வெளியேறி மணற்காடு றோமன் கத்தோலிக்கப் பாடசாலையில் தங்கியுள்ளனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக