சனி, 21 நவம்பர், 2009

சரத் பொன்சேகாவுக்கு போதியளவு பாதுகாப்பு கிடைக்கும் -பாதுகாப்பு அமைச்சு....

தமது பாதுகாப்பு குறித்து ஜெனரல் சரத்பொன்சேகாவிடுத்த கோரிக்கையின் பிரகாரம் அவருக்கு அதிகளவு பாதுகாப்பு வழங்கப் பட்டிருப்பதாகவும் அவர் தனக்குரிய வசிப்பிடத்தை கண்டுபிடித்து செல்லும்வரை இராணுவத்தளபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலேயே தொடர்ந்தும் இருக்க முடியும் எனவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் சரத்பொன்சேகாவுக்கு 70கொமாண்டோக்களும் குண்டு துளைக்காத கார் ஒன்றும் மேலும் பல பாதுகாப்பு வாகனங்களும் வழங்கப்படவுள்ளதாகவும் தன்மை அடையாளம் காட்டக்கூடாது என்ற நிபந்தனையின் கீழ் பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரியொருவர் டெய்லிமிரர் இணையத்தளத்துக்கு தெரிவித்துள்ளார். படுகொலை செய்வதற்காக புலிகள் தயாரித்து வைக்கப்பட்டுள்ள பட்டியலில் தான் இப்போது இருப்பதாகவும் தமக்கு தீவிர பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமெனவும் ஓய்வுபெற்ற ஜெனரல் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடதக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக