சனி, 17 அக்டோபர், 2009

இராணுவச் சீருடடையணிந்த கொள்ளையனின் துப்பாக்கிச் சூட்டில் வவுனியாவில் ஒருவர் பலி.. பணம் நகைகொள்ளை!

வவுனியா எல்லப்பர் மருதங்குளம் என்ற இடத்தில் நேற்றிரவு நேற்றிரவு 9 மணியளவில் இராணுவச் சீருடையை ஒத்த உடை ஒன்றில் சென்ற கொள்ளையன் ஒருவர் ஆயுதமுனையில் பணம் நகை என்பவற்றை கொள்ளையிட்டு சென்றுள்ளார் அவரைத் துரத்திப்பிடிக்க ஊரவர்கள் மூவர் முயன்ற போது கொள்ளைக்காரன் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் பலியானார் மற்றுமொருவர் காலில் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். ராமமூர்த்தி புலேந்திரன் (வயது36) என்பவர் துப்பாக்கிச்சூட்டு இலக்காகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தவராவார் எனவும் படுகாயமடைந்தவர் திருநாவுக்கரசு கிருபாகரன் எனவும் தெரிவிக்கப்படுகிறது.; 1லட்சரூபாவுக்கு மேல் பணத்தையும் 26பவுண்நகைகளையும் கொள்ளையிட்டு சென்றுள்ளனர் இச்சம்பவத்தையடுத்து இப்பிரதேசத்தில் பதட்டநிலை தோன்றியிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன இன்றுகாலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர் வவுனியா மாவட்ட நீதிபதி சம்பவ இடதத்திற்கு நேரில் வந்து விசாரணை செய்துள்ளார் குறிப்பிட்ட கொள்ளைக் காரனை இனம் காண்பதற்கு வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகின்றது. என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக