சனி, 24 அக்டோபர், 2009

கருணாவின் கூத்து என்ன கொடுமை......

அமைச்சர் கருணா அம்மானின் பிரத்தியேக செயலாளரின் அழகை ஒருபடி உயர்த்துமுகமாக பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை செய்யப்பட்டிருப்பது அனைவருக்கும் வேடிக்கையான ஓர் விடயம். நேற்று கொழும்பிலுள்ள மிகவும் உயர் தரம் கொண்ட வைத்தியசாலையில் ஒன்றான அப்பலோ மருத்துவமனையில் இவருக்கான பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. இதற்காக செலவளிக்கப்பட்ட பணம் 465.000 ரூபாய். இச்சத்திர சிகிச்சையினை வெற்றிகரமாக செய்தவர் வைத்தியர் பூர்ணிமா மூர்த்தி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது இவர் தங்கியிருந்து சிகிச்சை பெற்ற அறையின் இல 4006 எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏழை மக்களின் பணம்தான் இதற்குப் பயன்பட்டிருக்கின்றது. அதாவது ஓர் அழகிய நங்கைக்காக அதுவும் அநாவசியமற்ற ஓர் விடயத்திற்காக இவ்வளவு பணமா?. கருணாவின் பிரத்தியேக செயலாளரான அம்மணி வெளியில் செல்லும் போது மிகவும் அதிகளவான மேக்கப்புடன்தான் செல்வார். அது இந்தக் கோடைவெயிலுக்கு பட்டென்று எல்லாம் வியர்வையில் கரைந்து கீழே கொட்டிவிடும். பின்னர் அந்தப் பெண்மனியின் உண்மையான தோற்றம் வயதானவராக விளங்கிவிடும் கருணாவிற்கு சங்கடம். இதனால்த்தான் நிரந்தரமாக வயதானவரை குமராக மாற்றும் சத்திரசிகிச்சையினை மேற்கொண்டிருக்கின்றார். இந்தக் காசை ஓர் அநாதை இல்லத்திற்கு கொடுத்திருந்தால் சில குழந்தைகளின் வாழ்வுநிலை உயர்ந்திருக்கும் என மட்டுநகர் மக்கள் மனம் குமுறுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக