சனி, 17 அக்டோபர், 2009

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்ற இலங்கையர்களின் விதியை இந்தோனேசியா தீர்மானிக்கட்டும்.. அவுஸ்திரேலியா தெரிவிப்பு

இந்தோனேசியாவின் கடலில் வைத்து சென்ற ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட 260 இலங்கைத் தமிழர்கள் குறித்த முடிவை இந்தோனேசிய அரசாங்கமே தீர்மானிக்கட்டும் என அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. அந்த மக்கள் படகுமூலம் அவுஸ்திரேலியா நோக்கி சென்றுக் கொண்டிருந்த போது இந்தோனேசிய கடற்படையினரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடதக்கது. ஆனால் படகிலுள்ள மக்கள் தாம் அவுஸ்திரேலியா செல்ல விரும்புவதாக தெரிவித்துள்ள நிலையில் அவுஸ்திரேலிய துணைப் பிரதமர் ஜூலியர் கிலார்ட் இந்தோனேசியாவில் வைத்துத் தான் இந்த மக்கள் கைது செய்யப்பட்டுள்ளதால் அவர்கள் குறித்த தலைவிதியை தீர்மானிக்க வேண்டியது இந்தோனேசியா தான் இது இந்தோனேசியாவின் உள்நாட்டு விவகாரம் என்று தெரிவித்துள்ளாராம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக