சனி, 12 செப்டம்பர், 2009

வாகனங்களைத் திருடி உதிரிப்பாகங்களை விற்றுவந்த இருவர் வவுனியா இரம்பைக்குளம் பிரதேசத்தில் கைது!

வாகனங்களை கொள்ளையிட்டுச் சென்று அதன் உதிரிப்பாகங்களை விற்பனை செய்து வந்த இருவரை வவுனியா இரம்பைக்குளம் பிரதேசத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் கொள்ளையிட்டு வைத்திருந்த முச்சக்கர வண்டியொன்றையும், மோட்டார் சைக்கிள்கள் நான்கையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக, பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ்மாஅதிபர் நிமல் மெதிவக்க தெரிவித்துள்ளார். வவுனியா விசேட பொலிஸ் பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றையடுத்து இரம்பைக்குளத்துக்கு விரைந்த பொலிஸார் சந்தேக நபர்களிருவரையும் கைது செய்த அதேசமயம், அவர்களிடமிருந்த வாகனங்களையும் மீட்டெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். சந்தேக நபர்கள் இருவரும் மேற்கொண்ட கொள்ளைச்சம்பவங்கள் தொடர்பாகவும் வாகன உரிமையாளர்கள் தொடர்பாகவும் மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக