புதன், 16 செப்டம்பர், 2009

ஒரு வயது நிரம்பிய பெண் குழந்தையின் வயிற்றில் இரட்டைக்குழந்தைகள்


சீனாவில், பிறந்தவுடன் கைவிடப்பட்ட ஒரு குழந்தையை குழந்தைகள் இல்லாத பெற்றோர் அந்த குழந்தையை எடுத்து வளர்த்து வந்தனர். ஒரு வயதுடைய காங் மெங்ரூ (Kang Mengru) என்ற அந்த பெண் குழந்தையின் வயிற்றில், இரட்டை சிசு உள்ள ஆபூர்வம் நடந்துள்ளது.அக்குழந்தையின் வயிற்று பகுதி நாளுக்கு நாள் பெரிதாகி கொண்டே போவதால், குழந்தையின் பெற்றோர் மருத்துவமனைக்கு காங் மெங்ரூவை (Kang Mengru) கொண்டு சென்றனர். மருத்துவர்கள் குழந்தை பரிசோதனை செய்த போது, குழந்தையின் வயிற்றில் இரட்டை சிசு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த குழந்தைக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யாவிடில் அக்குழந்தை இறக்க நேரிடும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால் அக்குழந்தையின் வளர்ப்பு பெற்றோரிடம் அறுவை சிகிச்சைக்குரிய போதிய பணமில்லாததால் உள்ளூர் அதிகாரிகளின் உதவியுடன் மக்களிடமிருந்து தேவையான நிதியை வசூலித்து வருகின்றனர். காங் மெங்ரூவிற்கு விரைவில் அறுவைசிகிச்சை நடக்க உள்ளது. இக்குழந்தைக்கு நடக்கவிருக்கும் அறுவை சிகிச்சை நல்லபடியாக நடந்து அக்குழந்தை நலமுடன் வாழ ஆண்டவனை பிரார்த்திப்போமாக.













கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக