ஞாயிறு, 20 செப்டம்பர், 2009

புலிகளின் சிறுகுழு ஒன்று தற்கொலைதாரிகள் மற்றும் உதவியாளர்களுடன் கொழும்பு மாநகரில் ஒளிந்துள்ளனர் -மேஜர்ஜெனரல் மனோபெரேரா!


புலிகளின் சிறுகுழு ஒன்று தமது தற்கொலைதாரிகள் மற்றும் உதவியாளர்களுடன் கொழும்பு மாநகரிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் ஒளிந்திருக்கின்றது. மேற்கு மாகாண நடவடிக்கைகளுக்கு பொறுப்பான கட்டளைத்தளபதி மேஜர்ஜெனரல் மனோ பெரேரா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் வைத்தே இத்தகவலை வெளியிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, பயங்கரவாதிகள் நகரிலும் சுற்றுப்புறங்களிலும் செயற்படுகிறார்கள் தற்கொலைக் குண்டுதாரிகளின் அச்சுறுத்தல் தொடர்ந்து இருக்கின்றது. பொலிஸாரும் இராணுவத்தினரும் பல இடங்களில் ஆயுதங்களை மீட்டுள்ளனர் படையினரின் 60வது ஆண்டு கொண்டாட்டங்களை பயங்கரவாதிகள் குழப்பும் சாத்தியம் உள்ளதால் நகரிலும் சுற்றுப்புறங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மே 19ம் திகதி நந்திக்கடல் ஏரிப்பகுதியில் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்ட பின்னர் அவர்களின் தாக்குதல் ஒன்றுதானும் இடம்பெறவில்லை எனினும் மட்டக்களப்பில் சிப்பாய் ஒருவர் தாக்குதலில் கொல்லப்பட்டார். அங்கிருந்து புலிகளை விரட்டி விடுவோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக