தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு கடந்த காலத்தை ரஷ்யாவைச் சேர்ந்த விஷேட படையினரால் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை புலனாய்வுப் பிரிவினர்தெரிவித்துள்ளனர் கடந்த 2004 ஆம் ஆண்டு சமாதான காலத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வன்னிக்குப் பயணம் செய்த ஒய்வுபெற்ற ஐந்து ரஷ்யாவைச் சேர்ந்த விஷேட படை அதிகாரிகள் துப்பாக்கி சுடுதல் வாகனங்களை ஓட்டுதல் சொற்ப நேரங்களுக்குள் வாகனங்களைப் பொருத்துதல் மற்றும் வாகனங்களைக் கூறுகளாக அகற்றுதல் போன்ற நடவடிக்கைகளில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு விஷேட பயிற்சிகளை வழங்கியதாக இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர் இவ்வாறான பயிற்சி நடவடிக்கைகளில் பிரபாகரனின் மெய்ப்பாதுகாப்பு அணியைச் சேர்ந்த முப்பத்தைந்து பேர் இணைந்து கொண்டதாகவும் இலங்கையின் புலானாய்வுப் பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக