ஞாயிறு, 20 செப்டம்பர், 2009

கட்டார் ஊடாக இலங்கைக்கு விமானப்பயணம் மேற்கொண்டிருந்த யாழ். தமிழ் இளைஞர் காணாமற் போயுள்ளார்

சவூதி அரேபியாவிலிருந்து கட்டார் ஊடாக இலங்கைக்கு விமானப்பயணம் மேற்கொண்டிருந்த யாழ். தமிழ் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் காணாமற் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் ஆசீர்வாதப்பர் வீதியைச் சேர்ந்த 30வயதான மகாலிங்கம் பிரசாத் என்பவரே இவ்வாறு மர்மமான முறையில் காணாமற் போயுள்ளார். இவர் 2002ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் சவூதியில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தமது குடும்பத்தினருக்கு இன்ப அர்ச்சி ஒன்றை கொடுப்பதற்காக எவ்வித முன்னறிவித்தலுமின்றி வழங்காது புறப்பட்டு வந்துள்ளார். இவர் கடந்த புதன் மாலை சவூதி அரேபியாவிலிருந்து கட்டார் ஊடாக இலங்கைக்கான விமானப் பயணத்தை ஆரம்பித்துள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு 8.15ற்கு இலங்கை வந்து சேர்ந்திருக்க வேண்டும். ஆனால் இவர் இலங்கை புறப்பட்டு மர்மமான முறையில் காணாமற் போயுள்ளமை சவூதி அரேபியாவில் இவருடன் கூடவே வேலை பார்க்கும் இலங்கையைச் சேர்ந்த சக ஊழியர் ஒருவர் மூலமே குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் குறிப்பாக கிளிநொச்சி, முல்லைத்தீவைச் சேர்ந்த பல இளைஞர்கள் வறுமையின் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் புரிந்து திரும்பி வந்த நிலையில் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து புலிச் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பல்வேறு சிறைகளில் எவ்வித அறிவித்தலுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக