ஞாயிறு, 20 செப்டம்பர், 2009

நம்மிடம் அணுஆயுத சக்தி உள்ளது உறுதியாக கூறுகிறேன்- எம்.கே.நாரயணன்!

பொக்ரானில் 1998ல் நடத்தப்பட்ட அணுகுண்டு சோதனை வெற்றி தான் என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் கூறியுள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார். ”நம்மிடம் அணுஆயுத சக்தி உள்ளது. இதை உறுதியாக கூறுகிறேன். இதுதொடர்பாக கடந்த வாரம் அணுசக்தி கழகமும் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. எனவே, இதுதொடர்பாக அரசுத் தரப்பில் மறுஆய்வு தேவையில்லை” என்று எம்.கே. நாராயணன் கூறியுள்ளார்.“‘அணுகுண்டு சோதனை தொடர்பாக சந்தானம் மற்றும் சில விஞ்ஞானிகள் தெரிவித்த கருத்துக்கள் அவர்களிடையே உள்ள தனிப்பட்ட மோதல்கள் காரணமாக வெளியிடப்பட்டவை ஆகும்” என்றும் அவர் கூறினார்.
ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் கடந்த 1998ல் இந்தியா இரண்டாவது முறையாக நடத்திய அணுகுண்டு சோதனை தொடர்பாக சமீபத்தில் சர்ச்சை எழுப்பப்பட்ட நிலையில், முதன்முறையாக அரசுத் தரப்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக உள்ள எம்.கே. நாராயணன் விளக்கம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக