ஞாயிறு, 20 செப்டம்பர், 2009

மலேசியா அருகே படகு மூழ்கி விபத்து : 60 பேர் மீட்பு


மலேசியா அருகே கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான படகிலிருந்த இந்தோனேஷிய நாட்டைச் சார்ந்த 60 பேரை மீட்புக் குழுவினர் மீட்டு ள்ளனர்.இந்தோனேஷியாவிலிருந்து மலேசியாவுக்கு சட்டவிரோதமாக சென்று குடியேறியவர்களில் ஒரு குழுவினர், ரமலான் நோன்பு முடிந்து விடுமுறை தொடங்குவதையொட்டி, இந்தோனேஷியாவுக்கு படகில் திரும்பிக்கொண்டிருந்தனர்.ஆனால் 20 பேர் பயணிக்கக்கூடிய படகில் ஏராளமானோர் ஏறி பயணித்ததால், மலேசியாவிலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதில் அந்த படகில் பயணித்தவர்கள் நீரில் மூழ்கி தத்தளித்தனர்.இது குறித்த தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து சென்று நீரில் மூழ்கி தத்தளித்த 60 பேரை மீட்டனர்.இத்தகவலை மலேசிய கடற்படை காவல்துறை துணை தலைவர் நூர்தீன் உஸ்மான் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக