திங்கள், 25 மே, 2015

வலி மேற்கின் முன்பள்ளிகளுக்கு வேள் விசன் நிறுவனம் உதவி.!(PHOTOS)

கடந்த 22.05.2015 அன்று வலி மேற்கு பிரதேச சபைக் கலாச்சார மண்டபத்தில் வேள்ட் விசன் நிறுவனத்தின் அபிவிருத்தி வளவாளர் வி.வெஞ்சஸ் அவர்களின் வழிகாட்டலின் கீழ் வேள்விசன் நிறுவனத்தின் அனுசரனையுடன் வலிகாமம் வலயக் கல்வித்தினைக்களத்தின் ஊடாக சங்கானைக் கோட்டத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட முன்பள்ளிகட்கு சிறுவர் நூல்கள் உள்ளக விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது. 
இவ் நிகழ்வில் விருந்தினர்களாக வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் கௌரவ.நாகரஞ்சினி.ஐங்கரன்,சங்கானைப் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலர் திருமதி.அ.செந்தூரன்,சங்கானைக் கோட்டக்கல்விப் பணிப்பாளர் செல்வி.ஏ.எஸ்.மரியாம்பிள்ளை, வலி மேற்கு பிரதேச சபை செயலாளர் திருமதி.சாரதா. உருத்திரசாம்பவன், வேள்விசன் முகாமையாளர் திரு.ஐ.மைக்கல்,சங்கானை பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிபபாளர் வீ.சிவகுமார்,வலிகாமம் வலய ஆரம்ப முன்பள்ளி உதவிக்கல்விப்பணிப்பளர் திருமதி.றூபா உதயரட்ணம், சங்கானை பிரதேச செயலக ஆரம்ப பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகஸ்தர் செல்வி.சி.ஜெயதுர்க்கா அவர்களும் கலந்து சிறப்பித்தனர். 

இவ் நிகழ்வில் வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் கௌரவ.நாகரஞ்சினி.ஐங்கரன் அவர்கள் உரையாற்றுகையில் நாம் இந்த இடத்திற்கு ஆட்சிக்கு வருகை தரும் போது எவ்வாறு மக்களுக்கு உதவ முடியும் என்ற எண்ணம் உருவானது. பல வகையில் தடைகள் பல வகையில் சிக்கல்கள் எமக்கு என வகுக்கப்பட்ட வேலைகளில் நீர் வழங்கல் சுற்றுபபுற சுகாதாரம் முன்பள்ளி என பல தரப்பட்ட வேலைகள் காணப்பட்ட போதும் போது மான நிதி வசதி அற்ற நிலை கப்பட் நிலையில் எமக்கும் எம் பிரதேச மக்களுக்கும் உதவக் கூடிய நிலையில் இவ் இடத்திற்கு வருகை தந்து தொடர்ந்தும உதவி வரும் அமைப்பாக உள்ளது. இந்த வேள் விசன் அமைப்பு. அமைப்பானது எமது சுற்றுப்புறசூழல் சார்ந்த செயல் திட்டங்கள், நீர் வழங்கல் செயல் திட்டங்கள், முன்பள்ளினளின் முன்னேற்றம் சார்பான செயல் திட்டங்கள், மாற்று வலு உள்ளேர் தொடர்பான செயல் திட்டங்கள் என பல தரப்பட்ட செயல் திட்டங்களையும் வழங்கி பிரதேச அபிவிருத்தி மற்றும் நிலைத்து நிற்கும் அபிவிருத்தி தொடாடபான பல செயல் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றமை இங்கு குறிப்பிடக் கூடிய ஒன்றாகும் இதே வேளை இன்று இவ் இத்தில் நடைபெறுகின்ற முன்பள்ளிகளுக்கான கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் வழங்கல் விடயம் தொடர்பில் இது மிகமிக முக்கியமான ஒர் செயற்பாடாகவே அவதானிக்க முடியும் குறிப்பாக இவ் முன்பள்ளி சிறார்கள் உரிய முறையான கல்வியினைப் பெறும் சந்தர்ப்பத்தில் மாத்திரமே எதிர்கால நிலை மற்றும் அபிவிருத்தி நிலைகள் அர்த்தமுள்ளதாக அமையும் என்பதும் இங்கு குறிப்பிடக் கூடிய ஒன்றாகவே கூறமுடியும. இதே வேளை இவ் முன்பள்ளிகளின் வசதிகள் மற்றும ஆசிரியர்களின் வசதிகள் மேலும் முன்னேற்ற குறித்த வேள்விசன் நிறுவனம் உதவ முன்வரவேண்டும் என்ற வினயமான கோரிக்கையையும் இவ் இடத்தில் முன் வைக்கின்றேன். இதே வேளை அபிவிருத்தி என்பது வெறுமனே நிதி ஒதுக்கீட்டில் மட்டும் தங்கி இருப்பது ஒன்று அல்ல இவ் நிலைக்கு மேலாக குறித்த இலக்கு நோக்கி நகரக் கூடியதான நிலை அதிகாரிகள் மட்டம் முதல் பயன் பெறும் பயனாளிகள் வரை அர்பணிப்புடன் செயலாற்றும் போது மட்டுமே அடைவு  இலக்கு நோக்கிய நகர்வினை மேற்கொள்ள முடியும். அரச சார்பற்ற நிறுவனங்களுள் வேள் விசன் நிறுவனத்தின் பங்கு மற்றும் செயல் திறன் என்பன ஏனைய அமைப்புகட்கு முன் உதாரணமாய் அமையும். இவர்களது இவ் செயற்பாடுகள் தொடாடபில் பாராட்டுக்களை தெரிவிக்கும் அதே வேளை இவர்களது பணி இன்று போல் என்றும் நிலை பெற வாழ்த்துகின்றேன் என குறிப்பிட்டார்.












கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக