ஞாயிறு, 24 மே, 2015

திருக்கணித பஞ்சாங்க கணிதர் காலமானார்.!

திருக்கணித பஞ்சாங்கக் கணிதர் கலாபூஷணம் சி.சிதம்பரநாதக் குருக்கள் தனது 80 ஆவது வயதில் இன்று காலமானார்.   உடல்நலம் சுகவீனம்  காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று அதிகாலை 5மணிக்கு காலமானார்.    18.12.1935 இல் பிறந்த இவர் தென்மராட்சிப் பிரதேசத்தில் பல ஆலயங்களில் பிரதம குருவாகக் குருத்துவப் பணிகளை மேற்கொண்டவர். 
  மட்டுவிலில் இருந்து வெளிவரும் திருக்கணித பஞ்சாங்கத்தின் பிரதம ஆசிரியராகவும் திகழ்ந்தார். வேதாகம சோதிட பூஷணம், சிவாச்சாரிய திலகம், கலாபூஷணம் முதலிய கௌரவப் பட்டங்களையும் இவர் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக