நேபாளத்தில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் 25ம் திகதி காத்மன்டுவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.இந்த மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தானிய பிரதமர் நவாஸ் செரீப், ஆப்கானிஸ்தானிய ஜனாதிபதி அஸ்ரப் கானி, பங்களாதேஸ் பிரதம மந்திரி ஷேக் ஹசீனா, பூட்டான் பிரதமர் சேரிங் டப்காய், மாலைத்தீவு ஜனாதிபதி அப்துல்லா யேமன் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
சார்க் மாநாட்டுக்கான அழைப்புக்களை நேபாள அரசாங்கம் உத்தியோகபூர்வமாக விடுக்கவுள்ளது.
இந்தநிலையில் சார்க் தலைவர்கள், ஹோட்டல் சோல்டீயில் தங்கவுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக