வியாழன், 24 ஜூலை, 2014

காணாமற்போன அல்ஜீரிய விமானம் விழுந்து நொறுங்கியது! விமானி உட்பட 116 பேர் பலி!!

அல்ஜீரிய விமானம் விழுந்து நொறுங்கியதில் விமானி உட்பட 116 பேர் உயிரிழந்தனர். புர்கினா ஃபாசோவில் இருந்து புறப்பட்ட விமானம் நைஜரில் விழுந்து நொறுங்கியது. விமானம் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணித்த இரு விமானிகள், 4 ஊழியர்கள், பயணிகள் உட்பட 116 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

புர்கினா ஃபாசோவில் அவ்கடூகு நகரில் இருந்து புறப்பட்டவுடன்
விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதில் பயணித்த 51 பிரான்ஸியர்கள், 28 புர்கினா ஃபாசோவினர், 20 லிபியர்கள், 6 ஸ்பானியர்கள், 5 கனேடியர்கள், 4 ஜேர்மனியர்கள், லக்ஸம்பேர்க் மற்றும் சுவிற்ஸர்லாந்தைச் சேர்ந்த இருவர் உள்ளிட்ட 116 பேர் உயிரிழந்தனர். இது இந்த மாதத்தில் நடந்த இரண்டாவது பெரிய உயிரிழப்பு சம்பவம் ஆகும்.

நெதர்லாந்து தலைநகரில் இருந்து சென்ற மலேசிய விமானம் உக்ரைன் எல்லையில் கடந்த 17ஆம் திகதி சுட்டு வீழ்த்தப்பட்டதில் 298 பேர் உயிரிழந்தனர். மலேசியாவுக்கு சொந்தமான மற்றொரு விமானம் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து பீஜிங் சென்ற போது மார்ச் 8ஆம் திகதி காணாமற்போனது குறிப்பிடத்தக்கது. தொடர் விமான விபத்துக்களால் உலகம் முழுவதும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக