வியாழன், 15 மே, 2014

திருமலை பெண் மீது கந்தப்பளையில் வல்லுறவு - சந்தேகநபர் தலைமறைவு!!!


திருகோணமலையிலிருந்து நுவரெலியாவுக்கு வருகை தந்த பெண்ணை வல்லுறவுக்குட்படுத்திய சம்பவமொன்று கந்தப்பளை கொங்கோடியா மேற்பிரிவில் இடம்பெற்றுள்ளது.

திருகோணமலை - அம்பலபுற பகுதியை சேர்ந்த பெண்ணே (வயது 35 ) இவ்வாறு வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளதாக கந்தப்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்துடன் தொடர்புடைய நபர்
தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை தேடும் பணியில் பொலிஸார் இறங்கியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து தெரிய வருவதாவது,

குறித்த பெண்ணுக்கும் சந்தே நபருக்கும் நீண்ட காலமாக தொலைபேசி மூலம் தொடர்பு இருந்து வந்த நிலையில் கடந்த செவ்வாய் கிழமை இப்பெண் தனது தாயுடன் சந்தேகநபரை சந்திக்க நுவரெலியாவுக்கு வருகை தந்துள்ளார்.


தாம் தாயுடன் நுவரெலியாவுக்கு வந்துள்ளதை சந்தேக நபருக்கு அறிவித்ததையடுத்து குறித்த நபர் இவர்களை அங்கிருந்து முச்சக்கரவண்டியில் அழைத்து சென்ற வேளையில் கந்தப்பளை - கொங்கோடியா மேற்பிரிவு காட்டுப்பகுதியில் வண்டியை  நிறுத்தி  பெண்ணின் தாயை கட்டி வைத்து அப்பெண்ணை வல்லுறவுக்குட்படுத்தி விட்டு தப்பி சென்றுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் மேலதிக சிகிச்சைகளுக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தலைமறைவாகியுள்ள சந்தேக நபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக