வியாழன், 14 அக்டோபர், 2010

இரத்தினபுரி நிவித்திகல குக்குலகல தோட்டத்தில் மக்கள் தொடர்ந்து வசிக்கமுடியாத நிலை காணப்படுகிறது-எம்.கே.சிவாஜிலிங்கம்..!

இரத்தினபுரி நிவித்திகல குக்குலகல தோட்டத்தில் மக்கள் தொடர்ந்து வசிக்கமுடியாத நிலை காணப்படுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். நேற்று நிவித்திகல குக்குலகல பிரதேசத்துக்கு விஜயம்செய்த சிவாஜிலிங்கம் அங்குள்ள தமிழ் மக்களை சந்தித்துள்ளார். இது குறித்து எமது இணையத்தளத்துக்கு கருத்து தெரிவித்த எம்.கே சிவாஜிலிங்கம், நான் இன்று நிவித்திகல குக்குலகல பிரதேச மக்களை நேரில் சென்று சந்திதேன். இவர்கள் இன்னும் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். இம்மக்கள் இங்கு தொடர்ந்து தங்கமுடியாத நிலை காணப்படுகின்றது. இதுவரை 10 குடும்பங்கள் மாத்திரமே மீள் திரும்பியுள்ளதாகவும் தற்போதும் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை காணப்படுகிறது. தமிழ் குடும்பங்களின் 25 வீடுகள் பெருபாண்மை இனத்தவரால் தாக்கபட்டுள்ளதோடு இவர்களின் உடமைகளுக்கு சேதம் விளைவித்துள்ளனர். எனினும் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார மட்டுமே வந்து தம்மை பார்வையிட்டுள்ளார். எந்ந ஒரு தமிழ் அமைச்சர் கூட வரவில்லை என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர் என்றும் சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக