வியாழன், 14 அக்டோபர், 2010

இந்தியாவின் நிலைப்பாட்டை அலட்சியம் செய்ததன் விளைவாகவே பிரச்சினை சிக்கலாகியது-ஜெகான் பெரேரா..!

நாட்டின் கடந்த கால அரசுகள் இந்தியாவின் நிலைப்பாட்டை அலட்சியம் செய்ததன் விளைவாகவே பிரச்சினை சிக்கலாகியதாக இலங்கை சமாதானப் பேரவையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜெகான் பெரேரா தெரிவித்துள்ளார். இந்தியாவின் நிலைப்பாட்டை நாம் அலட்சியம் செய்ததால், ஆயுதக் குழுக்களுக்குப் பயிற்சியளித்தது என்று தெரிவித்த அவர், இந்தியாவின் கரிசனை இன்றும் நாளையும் என்றும் கவனத்திற்கொள்ளப் படவேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார். கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழு முன்னிலையில் நேற்று சாட்சியமளித்தபோதே ஜெகான் பெரேரா மேற்கண்டவாறு கூறியுள்ளார். இனப் பிரச்சினைக்கான ஓர் அரசியல் தீர்வைக் காண்பதற்கு இதுவே பொருத்தமான காலகட்டமாகும் உறுதியான ஓர் அரசாங்கம் இருப்பதால் தீர்வு காண்பதற்கு முடியும். யுத்தத்தை ஒரு பயங்கரவாத பிரச்சினையாக வரையறுக்க முடியாது இனப்பிரச்சினையின் பெறுபேறாகவே பயங்கரவாதம் தோன்றியது என்றும் ஜெகான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக