இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவுக்கு விஷேட பாதுகாப்பு வழங்கவேண்டும் என எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நேற்று இடம்பெற்ற நடாளுமன்ற அமர்வின்போது சிறப்புரிமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போது எதிர் கட்சித் தலைவர் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார். சிறையில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத்தளபதி பொன்சேகாவுக்கு பாதுகாப்பு குறைவாக காணப்படுவதால் அவருக்கு விஷேட பாதுகாப்பை வழங்க வேண்டும். இவர் சிறையில் இருந்து நீதிமன்றத்துக்கு அழைத்து செல்லப் படும்போதும், வரும் போதும் பாதுகாப்பு குறைவாக உள்ளது. எனவே விஷேட பாதுகாப்பு வழங்குவது தொடர்பில் சபாநாயகர் உத்தரவினை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
வியாழன், 7 அக்டோபர், 2010
இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவுக்கு விஷேட பாதுகாப்பு வழங்கவேண்டும்-எதிர்கட்சித் தலைவர்..!
இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவுக்கு விஷேட பாதுகாப்பு வழங்கவேண்டும் என எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நேற்று இடம்பெற்ற நடாளுமன்ற அமர்வின்போது சிறப்புரிமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போது எதிர் கட்சித் தலைவர் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார். சிறையில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத்தளபதி பொன்சேகாவுக்கு பாதுகாப்பு குறைவாக காணப்படுவதால் அவருக்கு விஷேட பாதுகாப்பை வழங்க வேண்டும். இவர் சிறையில் இருந்து நீதிமன்றத்துக்கு அழைத்து செல்லப் படும்போதும், வரும் போதும் பாதுகாப்பு குறைவாக உள்ளது. எனவே விஷேட பாதுகாப்பு வழங்குவது தொடர்பில் சபாநாயகர் உத்தரவினை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக