பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இந்தியாவிற்கு தங்கம் கடத்த முற்பட்ட இரண்டு பெண்களை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சுமார் இருபது லட்சம் ரூபா பெறுமதியான தங்கத்தை இவ்வாறு கடத்த முயற்சித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த இரண்டு பெண்களும் சந்தேகத்திற்கு இடமான வகையில் செயற்பட்டதாகவும், சுங்கப் பிரிவினர் சோதனைகளை நடத்திய போது தங்கம் கடத்தப்பட்டமை அம்பலமாகியதெனவும் தெரிவிக்கப்படுகிறது. 67 மற்றும் 48 வயதுடைய கொழும்பை வசிப்பிடமாகக் கொண்ட பெண்களே இவ்வாறு தங்கத்தை கடத்தியுள்ளனர். பங்களுர் நோக்கி தங்கம் கடத்தப்படவிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. கடத்தப்பட்ட தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதுடன், 100000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக