
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுமாலை 7 மணியளவில் இலங்கை வந்தடைந்துள்ளார். சிறீலங்கா விமானசேவைக்கு சொந்தமான விஷேட விமானத்தில் ஜனாதிபதி வந்தடைந்ததாக தெரிவித்துள்ளார். பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் இறுதி நிகழ்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விசேட அழைப்பில் நேற்று முன்தினம் புதுடில்லிக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்தார். அங்கு பிரதமர் கலாநிதி மன்மோகன்சிங்குடன் இடம்பெயர்ந்த மக்களின் நிலைமைகள், அவர்களின் மீள்குடியேற்றம் மற்றும் அதிகாரப்பரவலாக்கல் என்பன தொடர்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்துரையாடியுமுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக