
வடமராட்சிவல்வெட்டித்துறை எள்ளங்குளம் முத்துமாரியம்மன் நாச்சிமார் தேவஸ்தானத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள தேவர்கள் ஆலயத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அடிக்கல் நாட்டி வைத்தார். இன்று மாலை எள்ளங்குளம் பகுதிக்கு வருகை தந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை பிரதேச மக்கள் திரண்டு நின்று மாலை அணிவித்து மங்கல வாத்தியம் சகிதம் அழைத்து வந்தனர். தேவஸ்தானத்தில் விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்ற பின்னர் அடிக்கல் நாட்டு நிகழ்வு இடம்பெற்றது. இதனைத்தொடர்ந்து ஆலய முன்னறிலில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்திலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பங்குகொண்டார். அச்சமயம் பிரதேச பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளினால் தமது தேவைகள் கோரிக்கைகள் குறித்த மகஜர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கையளிக்கப்பட்டதுடன் மேற்படி ஆலய புனரமைப்பிற்கென 2000ம் ஆண்டில் அமைச்சரவர்கள் இரண்டு லட்ச ரூபாவினை ஒதுக்கீடு செய்து கொடுத்திருந்ததும் நன்றியுடன் நினைவுகூரப்பட்டது. இதனைத்தொடர்ந்து உரைநிகழ்த்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உங்களது கோரிக்கைகள் அனைத்தும் கட்டம் கட்டமாக நிறைவேற்றி வைக்கப்படும் என உறுதியளித்தார். இந்நிகழ்வில் ஈபிடிபியின் சர்வதேச பொறுப்பாளர் மித்திரன் ஈபிடிபியின் வடமராட்சி அமைப்பாளர் ரங்கன் உட்பட தேவஸ்தான நிர்வாகிகளும் பெருமளவு பொதுமக்களும் பங்குகொண்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக