ஞாயிறு, 8 மார்ச், 2015

இலங்கை மீனவர்களின் 5 படகுகள், இந்திய கடற்படையினரால் விடுவிப்பு..!!

தமிழகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்களின் 5 படகுகளை இந்திய கரையோர காவல் படையினர் நேற்று விடுவித்துள்ளனர்
நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தூத்துக்குடி கடற்பகுதியில் இருந்து இந்தப்படகுகள் விடுவிக்கப்பட்டன.

இந்த படகுகளில் 7 இலங்கை மீனவர்கள் பயணிக்க அவர்களுக்கு இந்திய கரையோர காவல்படையினர் இலங்கை கடல் வரை பாதுகாப்பை வழங்கவுள்ளனர்.

இதன் பின்னர் குறித்த படகுகள் இலங்கையின் கடற்படையினரிடம் கையளிக்கப்படவுள்ளன.


இந்தப்படகுகள் 2014 மே முதல் செப்டெம்பர் மாதப்பகுதிக்குள் கைப்பற்றப்பட்டவையாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக