
ஜனாதிபதி செயலகத்துக்கு சொந்தமான 749 வாகனங்கள் காணாமற்போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது இதனடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
இந்நிலையில் பலரும் வாகனங்களை ஒப்படைத்தனர். சிலர் வெளிநாடு சென்றதால் அதற்குப் பதிலாக வேறுநபர் ஊடாகவும் வாகனங்கள் ஒப்படைக்கப் பட்டன. சில இடங்களில் கைவிடப்பட்ட நிலையில் வாகனங்கள் மீட்கப்பட்டன.
இந்நிலையில் நேற்று 10 ம் திகதி வரையில் 21 வாகனங்கள் இன்னமும் காணாமற் போயுள்ளதாக பொலிஸாருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
எனவே நேற்று முதல் ஜனாதிபதி செயலக வாகனங்களை வைத்திருப்போருக்கு மன்னிப்பு வழங்கப்படுவதில்லை என பொலிஸ் தலைமையகம் முடிவு செய்துள்ளது.
அரசாங்க வாகனத்தை சட்ட விரோதமாக வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இவ்வாறானவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார்.
இன்று முதல் வாகனத்தை ஒப்படைப்பார்கள் என்று கருதாமல் சட்ட விரோதமாக வைத்திருந்தார்கள் என்றே கருதப்படுவார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக