திங்கள், 19 ஜனவரி, 2015

வ/சைவப்பிரகாச மகளிர் கல்லூரி ஆரம்ப பாடசாலையின் கால்கோள் விழா!! (படங்கள் இணைப்பு)

வ/சைவப்பிரகாச மகளிர் கல்லூரி ஆரம்ப பாடசாலையின் கால்கோள் விழா இன்றைய தினம் (19.01) காலை 09.00 மணியளவில்  ஆரம்ப பாடசாலை அதிபர் திருமதி.கி.நந்தபாலன் தலைமையில் கல்லூரி வளாகத்தில்  நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா நகரசபை முன்னாள் உப நகரபிதாவும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் வவுனியா மாவட்ட இணைப்பாளரும் கோயில்குளம் இளைஞர் கழகத்தின் இஸ்தாபகருமான கௌரவ சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக வலயக்கல்வி பணிமனையை  சேர்ந்த திருமதி .N.கிரேனியர் , ஆரம்ப பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் திரு.சு.தவபாலன், சைவப்பிரகாச மகளிர் கல்லூரி அதிபர் செல்வி.உமா
இராசையா, பிரதி அதிபர் திருமதி.க.பாக்கியநாதன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

கால் கோள் விழா நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் சமூக ஆர்வலர் திரு.கண்ணதாசன், கோயில்குளம் இளைஞர் கழகத்தின் சஞ்சீ, நிகேதன்,
 பெற்றோர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், மற்றும்  நலன்  விரும்பிகள்  என பலர் கலந்து கொண்டனர்.




















































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக