செவ்வாய், 20 ஜனவரி, 2015

தேர்தலின் பின்னர் மோசடிகளுடன் தொடர்புடைய 50 பேர் நாட்டை விட்டு தப்பியோட்டம்..!!

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் மோசடிகளுடன் தொடர்புடையதாக குற்றம் சுமத்தப்பட்ட 50 பேர் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
பல்வேறு பாரிய மோசடிகளுடன் இந்த நபர்களுக்கு தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர்.

பாரியளவில் ஊழல் மோசடிகளுடன் தொடர்புடைய நபர்கள் நாட்டை விட்டு தப்பிச் செல்வதனை தடுக்கும் நோக்கில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் அமரதுங்க, குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.


மோசடிகளுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரும் இரகசியமாக நாட்டை விட்டு தப்பிச் செல்ல ஆரம்பித்துள்ளனர்.

பாரிய மோசடிகளுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள், முக்கிய பிரமுகர்கள் பற்றிய தகவல்கள் விமான நிலையப் புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தோல்வியைத் தழுவியதனைத் தொடர்ந்து பெரும் எண்ணிக்கையிலான அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் இரகசியமாக நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக