வியாழன், 15 ஜனவரி, 2015

சமளங்குளம் யுரேனஸ் இளைஞர் கழகத்தின் பொங்கல் விழா நிகழ்வு!!


சமளங்குளம்  யுரேனஸ் இளைஞர் கழகத்தின் பொங்கல் விழா நிகழ்வு இன்றைய தினம் (15.01) காலை 10.00 மணியளவில் யுரேனஸ் இளைஞர் கழகத்தின் தலைவர் திரு.சின்சுபன் தலைமையில்   சமளங்குளத்தில் நடைபெற்றது. 

இந் நிகழ்வில் முதன்மை அதிதியாக வவுனியா நகரசபை முன்னாள் உப நகரபிதாவும் தமிழீழ மக்கள் விடுதலைக்
கழகத்தின் வவுனியா மாவட்ட இணைப்பாளரும் கோயில்குளம் இளைஞர் கழகத்தின் இஸ்தாபகருமான கௌரவ சந்திரகுலசிங்கம் (மோகன்) ஐயா அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

தமிழர்களின் பண்பாட்டை பிரதிபலிக்கும் தைதிருநாள் பண்டிகை மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 

நிகழ்வை தொடர்ந்து சமளங்குள கிராமத்தின் அபிவிருத்தி வள்ளுவர் சனசமூகத்தின் அபிவிருத்தி , யுரேனஸ் இளைஞர் கழகத்தின் வளர்ச்சி மற்றும் கிராம இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் சமளங்குள கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் லிங்கம், உறுப்பினர்களான யோகராசா, ராமஜெயம் மாதர் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள்  மற்றும்  வள்ளுவர் சனசமூக நிலைய உறுப்பினர்களும், யுரேனஸ்  இளைஞர் கழகத்தின் பிரணவன், பிரேம், ஜெயந்தன், தாநோஜன், அமலன், கிருஷாந் மற்றும் கோயில்குளம் இளைஞர் கழக உறுப்பினர்களான சஞ்சீ, சுரேஷ், சுகந்தன், நிகேதன், கேசவன், கிராம பெரியோர்கள், சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக