ஞாயிறு, 21 டிசம்பர், 2014

தேசிய அரசாங்கத்துக்கு ஜே.வி.பியின் உதவியை எதிர்பார்க்கும் ஐ.தே.கட்சி..!!

ஜே வி பியின் உதவியை எதிர்பார்ப்பதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது.

பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு நேரடியான ஆதரவை தெரிவிக்கப் போவதில்லை என்று ஏற்கனவே ஜே.வி.பி அறிவித்துள்ளது.

எனினும் தேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கத்தின் அமைப்புக்காக ஜே.வி.பியின் உதவி கோரப்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய தலைவர் ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.


இந்தநிலையில் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் அமைக்கப்படவுள்ள தேசிய அரசாங்கம். அவசரமாக உள்ள சில விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தும் என்றும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக