ஞாயிறு, 28 டிசம்பர், 2014

மஹிந்தவின் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு எதிராக மைத்திரியின் சுதந்திரக்கட்சி உருவாக்கம்..!!!

ஜனாதிபதியின் தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து விலகி, எதிரணி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்துள்ளவர்கள் மாநாடு ஒன்றை நடத்தவுள்ளனர்.
ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் இந்த மாநாடு நடத்தப்படவுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க ஆகியோரின் தலைமையில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.

இந்தநிலையில் குறித்த குழுவினர் பிரதான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியாக செயற்படுவது குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.



ஜனாதிபதி தேர்தலின் பின்னர் கட்சியின் கொள்கைவகுப்பு குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளது.

இதன்படி கட்சியின் செயலாளருக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்படவுள்ளன.

இந்தநிலையில் சட்டரீதியாக மஹிந்தவிடம் இருந்து எதிரணிக்கு சென்ற ஆளும் கட்சி உறுப்பினர்களை காப்பாற்ற உதவ முடியும் என்று முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா உறுதியளித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக