வியாழன், 4 ஜூன், 2015

வலி மேற்கில் சுற்றுலா பிரதேசங்கள் முன்மொழிவு.(படங்கள் இணைப்பு)

வலி மேற்கு பிரதேசத்தின் திருவடி நிலைப் பகுதியில் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாள் திருமதி.நாகரஞ்சினி.ஐங்கரன் தலைமையிலான உத்தியோகஸ்தர்கள் அணி, குறித்த பிரதேசத்தை சுற்றுலாப் பிரதேசமாக்கும் பொருட்டு அண்மையில் பார்வையிட்டனர்.

 இதே வேளை இவ் விடயம் தொடர்பாக  வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி.ஐங்கரன் அவர்களிடம் வினவிய போது
5 ஆண்டுத் திட்டத்தில் குறித்த பிரதேசம் சுற்றுலாவுக்குரிய பிரதேசமாக முன்மொழியபபட்டுள்ளதாகவும் குறித்த பிரதேசத்ததில் இவ்வாறான நிலை அமையும் ஆயின் அப் பகுதி மிகச் சிறப்பாக மாற்றமடையும் எனவும் குறிப்பிட்டார்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக