வியாழன், 25 டிசம்பர், 2014

இ.போ.சபை ஊழியரின் தபால் மூல வாக்குச் சீட்டு திருட்டு..!!

இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர் ஒருவரின் தபால் மூல வாக்கு, வேறு ஒருவரினால் சட்ட ரீதியற்ற முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

திவுலப்பிட்டிய இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர் ஒருவரின் தபால் மூல வாக்குச் சீட்டே இவ்வாறு சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

இவரது வாக்குரிமை மீறப்பட்டமை குறித்து குறித்த ஊழியர், திவுலப்பிட்டிய பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

தான் இன்று காலை வாக்களிப்பு நிலையத்துக்கு வந்தபோது திரும்பிச் செல்லுமாறு ஒரு குழு தன்னிடம் வற்புறுத்தியது.


பின்னர் தேர்தல் கண்காணிப்பாளர் ஒருவரிடம் தெரிவித்து விட்டு, வாக்களிப்பு நிலையத்துக்குச் சென்றபோது, தனது வாக்குச் சீட்டு ஏற்கனவே வேறு ஒருவரினால் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது எனவும் குறித்த டிப்போ ஊழியர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக