சனி, 20 டிசம்பர், 2014

மலையக மக்கள் முன்னணியின் தலைவி மஹிந்தவுக்கு ஆதரவை வெளிப்படுத்தினார்..!!

மலையக மக்கள் முன்னணியின் தலைவி சாந்தினிதேவி சந்திரசேகரன் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு என்று அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு நேற்று இரவு தலவாக்கலையில் வைத்து இடம்பெற்ற செய்தியாளர் சந்தப்பின் போது வெளியிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கட்சிக்குள் இதுவரை இருந்து வந்த பிளவு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கட்சி தலைவியின் மாற்று அறிவிப்பை அடுத்தே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த வாரம் கூடிய கட்சியின் செயற்குழு பொதுவேட்பாளர் மைத்திரிபாலவுக்கு ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியது.


இதன்போது சாந்தினிதேவியும் சமுகமளித்திருந்தார்.

இதனையடுத்தே பிரதியமைச்சர் பதவியை வி ராதாகிருஸ்ணன் ராஜினாமா செய்தார்.

இந்தநிலையில் சாந்தினிதேவியின் முடிவை ஆட்சேபித்துள்ள கட்சியின் செயற்குழு இன்று கூடி முடிவெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக