செவ்வாய், 16 டிசம்பர், 2014

ஜனாதிபதி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள பாரியளவில் பணத்தை செலவிடுகின்றார் ரோசி சேனாநாயக்க..!!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள பாரியளவில் பணத்தை செலவிட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பு கட்டான பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாம் மிகவும் தீர்மானம் மிக்கதொரு தருணத்தை எட்டியுள்ளோம்.

நாட்டின் சொத்துக்கள் கொள்ளையிடப்படுகின்றன. நாடு அடைந்துள்ள ஆபத்தான நிலைமையை கருத்திற் கொண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து கொண்டுள்ளனர்.


நாட்டில் ஊழல் மோசடிகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.

நாட்டிலிருந்து வறுமையை ஒழிக்க மைத்திரிபால சிறிசேன முயற்சிக்கின்றார். இந்த முயற்சிக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை தோற்கடிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

ஆயிரக் கணக்கானவர்களை அலரி மாளிகைக்கு அழைத்து ஜனாதிபதி பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்கின்றார்.

புலம்பெயர் தமிழர்களின் பெயர்களைப் பயன்படுத்தி பிரச்சாரம் செய்யப்படுகின்றது.

புலம்பெயர் தமிழர்களுக்கும் புலிகளுக்கும் தொடர்பு கிடையாது.

மைத்திரிபால சிறிசேன ராஜபக்ச ஆட்சியை இல்லாதொழிக்கும் நோக்கில் தேர்தலில் போட்டியிடுகின்றார் என ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக