
இந்த வழக்கு நேற்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போதே நீதிபதி மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.
பலாலியிலிருந்து இரத்மலானை நோக்கி பறந்துகொண்டிருந்த போதே இலங்கை விமானப்படைக்கு சொந்தமான லயன் எயர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.
இதன் பிரகாரம் இம்மாதம் 10,11 மற்றும் 12ஆம் திகதிகளில் இந்த விசாரணை முன்னெடுக்கப்படவிருக்கின்றது.
இரணைதீவுக் கடலில் கடந்த 1998ஆம் ஆண்டு செப்டெம்பர் 29ம் திகதி சுட்டுவீழ்த்தப்பட்ட லயன் எயர் விமானத்திலிருந்து மீட்கப்பட்ட 72 வகையான தடயப் பொருட்களில் 11பேர் தங்களுடைய உறவினர்களின் பொருட்களை அடையாளம் காட்டியுள்ளனர் என்று பாணந்துறை சட்ட வைத்திய அதிகாரி பிரசன்ன தஸநாயக்க தெரிவித்தார்.
இதற்கு முன்னரும் இந்தவழக்கு தொடர்ச்சியாக நான்கு நாட்களுக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்தது.
சம்பவம் தொடர்பில் அதிகுற்றங்கள் சுமத்தப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் சந்தேகநபர்கள் இருவரையும் அந்த மூன்று நாட்களும் நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக ஆஜர்படுத்துமாறும் பணித்தார்.
இந்த சம்பவத்தில் பாதுகாப்பு பிரிவினர் உள்ளிட்ட 32 பேர் பலியானமை குறிப்பிடத்தப்பது.
இந்த விமானம் சுட்டுவீழ்த்தப்பட்ட இரணைதீவுக் கடலில் இருந்து மீட்கப்பட்ட 72 வகையான தடயப் பொருட்கள் யாழ். சுப்பிரமணியம் சிறுவர் பூங்காவுக்கு முன்பாக 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11,12ம் திகதிகளில் காட்சிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக